புலி வழிபாட்டில் மிகுந்த உணர்வுடன் ஈடுபடுவோனாக என் சிறுபிராயத்தில் இருந்தேன். புலி என்றால் இங்கே அமேஸான் பகுதிப் பச்சைக்காடுகளில், பரானா நதியில் மிதந்துவரும் தாவரங்களில் உறைகிற, புள்ளிகொண்ட ஜாகுவார் சிறுத்தையல்ல. மாறாக, அது ஆசியக்கண்டத்தில் காணப்படும் அரசமிடுக்கு கொண்ட வரிவிலங்கு. ஆனை அம்பாரி மீதமர்ந்த ஒரு போர்வீரன்தான் இதைத் தேடிக் கண்டறிய முடியும்...
அப்போதெல்லாம் மிருகக்காட்சிசாலையில் கூண்டொன்றில் இருந்த இதன்முன்னே முடிவற்றுத் தறுகி நின்றதும் என் வழக்கம். பெரும் கலைக்களஞ்சியங்களை, இயற்கை-வரலாறு குறித்த புத்தகங்களை நாம் மதிப்பீடு செய்ததும் அவற்றில் புலிகள் பற்றி என்ன போட்டிருக்கிறது என்பதை வைத்துத்தான். ஒரு பெண்ணின் புன்னகையையோ புருவத்தையோ சரிவர நினைவுகொள்ள முடியாத எனக்கு இன்னும் நினைவிருப்பவை, அவற்றில் இருந்த புலிப்படங்கள்.
என் சிறுபிராயமும் கழிந்தது. புலிகளும் அவை குறித்த என் மோகமும் மூப்படைந்தன. என்றாலும் என் கனாக்களில் வருபவை அவை. ஆழ்மனதோ அதன் குழப்பமோவென அந்த மட்டத்தில் தொடர்பவை அவை. ஆக உறங்கும் என்னில் ஏதோ கனா வசீகரிக்க, திடீரென கனாக்காண்பதை அறிகிறேன். ஓ, இது கனா, என் மனோலயம் போடும் ஆட்டம்தான் என எண்ணி, எனக்கிருக்கும் எல்லையற்ற இந்த சக்திகொண்டு ஒரு புலியையே படைப்பேன் என நினைத்துக்கொள்வேன்.
ஓ, நான் மோகிக்கும் அந்தக் காட்டுவிலங்கை ஒருபோதும் மெய்யாக்கப்போவதில்லை என் கனாக்கள். அந்தத் திறன் எனக்கிருக்கிறதா என்ன.. புலியென்னவோ இன்னும் வரத்தான் செய்கிறது கனாவில். ஆனால் அந்தப்புலி இருப்பதும் பஞ்சடைத்தோ உடைவதாகவோ.. அதன் உருவமிருப்பதும் மாறியோ குலைந்தோ சாத்தியமற்றோ, கணத்தில் தோன்றிமறைவதாகவோ.. அது தீண்டுவதென்னவோ ஒரு பறவையை, நாயைப் போலத்தான்.
-- Jorge Luis Borges, Dreamtigers, 1960.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
29.6.09
கனாப்புலிகள் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(246)
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
►
08
(35)
- 108 - 14: லா. ச. ராமாமிருதம்
- எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி
- 108: 13 - வசனகவிதை
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 1 - ழார் பத்தாய்
- எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி
- ஒளிப்பதிவும் காலமும் - 3 - மணி கௌல்
- விழியின் கதை - 3
- விழியின் கதை - திரை
- ஒளிப்பதிவும் காலமும் - 2 - மணி கௌல்
- வன்னி முகாம்களைத் திறக்க வேண்டிப் பிரச்சாரம்
- ஒளிப்பதிவும் காலமும் - 1 - மணி கௌல்
- எழுத்தை வெட்டும் கல் - 7 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 6 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 5 - சிவத்தம்பி
- காணாக்காட்சி அல்ல என் சினிமா - கோதார்
- 108: 12 - ஹைக்கூ
- 108: 11 - பிற்போக்கு
- 108: 10 - தர்க்க அலசல்
-
▼
06
(16)
- மீண்டும் சாரு நிவேதிதாவுக்குக் கடிதம்
- நெஞ்சத்து அவலம் இலர் - 2
- கனாப்புலிகள் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
- இலங்கை அரசை ஆதரிக்கும் க்யூபா, பொலிவியாவுக்குக் கண...
- தமிழாக்கமும் ஆங்கில ஆக்கமும் - கடிதம்
- நெஞ்சத்து அவலம் இலர் - 1
- பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 2
- நிலவின் உருமாற்றம் - ஸில்வியா ப்ளாத்
- சாவாளும் புலம் அறுக - டிலன் தோமஸ்
- பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 1
- எங்கு? - பௌல் ஸெலான்
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு...
- நிலப்பரப்பு - பௌல் ஸெலான்
- குற்றமே போலாகும் காலம் - ப்ரெக்ஹ்டும் ஸெலானும்
- கறுப்பாய் - பௌல் ஸெலான்
-
►
10
(21)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (175)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (24)
- அணுசக்தி (10)
- அறிவியல் (41)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (53)
- உரைமொழி (4)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (168)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (174)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழலியல் (20)
- செயல் (84)
- ஜெர்மன் (9)
- திரை (25)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (39)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (166)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (23)
3 கருத்துகள்:
தன்னில் இருக்கும் புலி இறக்கும் போது அதனோடு இறுதியாக கழிந்த பொழுதுகள் மென்மையாகவோ, வன்மையாகவோ அழிக்கப்படும். அதன் பின்னர் வரும் கூர்மையான நகங்கள் நாம் கனவை கிழிக்கும், கிழிபடுவதற்காக காத்திருக்கும் நம் கனவுகள்.
இந்த பதிவினைப் படித்த பிறகு இதன் ஆங்கில மொழியாக்கதையும் படித்தேன்.[Dreamtigers, by Jorge Luis Borges, translated by Mildred Boyer] ஒரு சிறிய சந்தேகம். The tiger indeed appears,......, or with a touch of the dog or the bird என்பதை முதலில் 'நாயின் பறவையின் தீண்டுதலைப் போலத்தான் அதன் தீண்டலும்' என்று எழுதியிருந்தீர்கள். பிறகு '.. அது தீண்டுவதென்னவோ ஒரு பறவையை, நாயைப் போலத்தான்' என மாற்றியுள்ளீர்கள். நீங்கள் ஸ்பானிஷிலிருந்து மொழிபெயர்த்தீர்களா?
எனக்குத் தெரிந்தவரை 'with the touch of' என்பதற்கு 'a suggestion of some quality (there was a touch of sarcasm in his tone) என பொருள்படும் என்று நினைக்கிறேன். எனவே 'அந்த கனாப்புலி..... ஒரு நாயின் அல்லது பறவையின் சிறு சாயல்/குணம்/தன்மை கொண்டதாகவோ உள்ளது' என நான் அர்த்தம் கொள்கிறேன். எனக்கு இதனை சரியாக மொழிபெயர்க்க தெரியவில்லை. தீண்டுதலுக்கு 'with the touch of' என்ற phrasal அர்த்தம் உள்ளதா என்றும் எனக்கு தெரியவில்லை. தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
நன்றி
சான் சுந்தர்
with a touch of என்பதற்கு நீங்கள் கூறுவது போல சிறுசாயல் என்பது சரியான பொருள். அதனால் இடையில் ’தோன்றுவதென்னவோ’ என ஒருமுறை போட்டேன். என்றாலும் அதில் literal-ஆகத் தீண்டுவது என்ற tactile பொருள் இல்லை. பிறகு ‘தீண்டுவதென்னவோ’ என மாற்றினேன். மூன்றிலும் எனக்குத் திருப்தியில்லை. ஆக, தமிழாக்கம் முழுமையில்லைதான்.
Post a Comment