தீக்கல்லாய்
தன் கால்பட்டுக் கேட்பாள் -
எஃகுத்தெருவினின்று இரையும்
இத்தனை எதிரொலியும்
கறுப்பினின்று தொடுக்கும்
நிலாநீலமடித்த வளைவில்
கல்லெழுப்பும் நகரமதன்
கட்டையதில் தீமூட்டி விரையும்
வாடையும் ஆட்டும்
சிறுகுடிலின்
இருளின்
சுவர்முதல் சுவர்வரை கேட்ட
வெடிவாண எதிரொலியும்
ஆயின்
இவள் பின்னே இறக்க,
சுவர் மறையத் தோன்றும்
விளைநிலமும்
விடாமல் சீறும் புல்லும்
முழுநிலவில் ஏறும்
வாடைக்குப் பிடரி தந்து
ஓயாமல்
நிலவெய்தும் கடலாய்
தன் வேரிலாட.
பிளவுண்ட பிலமதில்
எழும்பும் பனிபூதம்
முன்னே தோள்வரை
தொங்கினும் வீங்கும்.
இவள் நடந்த வெற்றுணர்வும்
சுற்றத்தார் கதைக்கும்
பூதத்துக்கல்ல,
பெயர் கொண்ட
எழுத்துரு எதற்குமல்ல.
கனாமாந்தர் கிடந்த
புலமிதும் தாண்டியுடன்
தன் கண் காணாள்
கனாவும் மணலான தூசியும்.
தொலைந்த ஒளி
இவள் அடித்தாற்றின் அடியில்.
நெடுநல்வாடையும்
அழல்துளியாய் வாரிக்கிடத்தும்
இவளுடல்.
தன் பாரிய சீழ்க்கையுமடிக்கும்
இவள் செவிப்பிடரியில்.
கலந்த ஒலியும்
கிள்ளியெடுத்த பூசணிமுடியாய்
அள்ளும்
இவள் தலை.
இவள் பேருடல் எனும்
போதாப்பரிசுக்கும்
விரையும்
இதயத்துடிப்புக்கும்
பதிலென இவ்விரவும் தந்ததோ
தன் மலையின்
திமிலான
பாராமுக இரும்பே,
கரும்பாறையில் தொடும்
கரும்பாறையென அமைந்த
புல்வெளியே.
களஞ்சியம் பல.
மூடிய கதவின் பின்
அடைகாப்பும் பொரிப்பும் பல.
கறவைப்பசுக்கூட்டம்
புல்வெளியில்
மௌனப்பாறையாய் முழந்தாளிட
செம்மறியாட்டு மந்தையும்
தம் கம்பளிப்பற்றையுடன்
கல்நோக்கிக் கண்மயங்கும்
வளார் கூட்டி ஓயும்
பறவைக்கூட்டம் அணியும்
கருங்கற்பாறை பல.
இவற்றின் நிழலும்
இலைபோல் வேடமிட
நிலப்பரப்பு யாவும்
கண்கண்டும் மாறாமல்
ஒருகாலம்
மரச்சாறும் பாலும்
முன்னாண்ட
முற்றான
பழம்-உலகாய்
இவள்தன்
சிறுசூட்டின் விரைவை
உறிஞ்சிடப் போதுமாய்.
ஆயின்
திரும்புவாள்
பாரிய மலைதன் பாறையும்
கல்லொளியில் தன்னை
ஸ்படிகமாய் நொய்யாய்
நொறுக்கும் முன்.
-- Sylvia Plath, Hardcastle Crags, 1956.
இங்கே பிரிட்டனில் நான் இன்னும் போகாத இடம், யார்க்ஷயர் மேற்குப்பகுதியில் உள்ள பெயர்பெற்ற Hardcastle Crags.
இங்கே ஸில்வியா ப்ளாத் முதன்முதல் சென்றபோது எழுதிய கவிதை இது. தொல்காப்பியம் கூறும் திணைமரபில் வருவது போல, நிலப்பரப்பின் உள்ளுறை மற்றும் இறைச்சியாக ஒன்றை முன்வைத்து ஸில்வியா ப்ளாத் எழுதிய முக்கியக்கவிதை இது எனத் தெரிகிறது. அதேவேளை, மனிதரற்ற இயற்கை என்ற பழம்உலகை ஒருகணம் தொட்டுத் திரும்பும் ரொமான்டிக் அலகும் வருவதைக் குறித்துக்கொள்ளலாம்.
மீண்டும் இதே பகுதிக்கு ஸில்வியா திரும்பி எமிலி-ஷார்லட் ப்ரான்ட சகோதரிகளின் இல்லம் செல்கிறார். அப்போது எழுதிய கவிதைக்கு எமிலி ப்ரான்ட எழுதிய பெயர்பெற்ற Wuthering Heights நாவலின் பெயரையே சூட்டுகிறார். அந்தக்கவிதையைப் பிறகு முயல்கிறேன்.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
12.5.09
கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(261)
-
►
12
(11)
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 3
- க்ஹஸர் அகராதியின் வரலாறு - மிலோராத் பாவிச்
- சாவில் தொடங்கும் பிறிதான வாழ்வு - பாவிச் மறைவு
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 2
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 1
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 2
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 1
- கண்ணாடியில் தெறிக்கும் கொலைச்செயல்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 3 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- போபால்: கால் நூற்றாண்டுக்காலக் குற்றம்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 2 - ஆர்தர் ஸி. க்ளர்க்
-
►
11
(8)
- அகர முதல எழுத்தெல்லாம்? - 1 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- கிழவியின் விரக்தி - ஷார்ல் போதலேர்
- அந்நியன் - ஷார்ல் போதலேர்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 5 - மரிலின் க்ரிஸ்ல்
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- ஃப்ரெஞ்சு அறிஞர் க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ் மறைவு!
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
▼
05
(17)
- மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு ...
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்ட...
- ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
- மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
- சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோ...
- இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....
- உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
- கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
- குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
- ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
- எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
- இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - த...
- அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
- முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
- பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
- தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
-
►
12
(11)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (181)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (27)
- அணுசக்தி (10)
- அறிவியல் (45)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (56)
- உரைமொழி (13)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (170)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (177)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழியல் (21)
- செயல் (86)
- ஜெர்மன் (9)
- திரை (30)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (41)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (168)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (28)
0 கருத்துகள்:
Post a Comment