பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

29.4.09

எற்றையும் நிலவும் திங்கள் - ஸில்வியா ப்ளாத்

எற்றையும் நிலவும் திங்கள்
பெற்று
நிற்பீர் நிலவில்.

நிலவின் மனிதன் நிற்பதும்
தன் ஓட்டில்.
ஒருகட்டுத்தடிக் கீழ் மடங்கி.
எம் கட்டில்விரிப்பின் மேல்
சாக்குக்கட்டியென
விழுமதன் தண்ணொளி.
அதன்
குன்ம முகடு பலதின்
ஒழிந்த எரிமலைக்குழி பலதின்
இடையே
கிடுகிடுக்கும் அவன் பல்.

கருங்காட்டை எதிர்கொண்டு
தடி பொறுக்குமவன்
நிற்கிலான்
தன் அறை
ஞாயிறுபூதமதைத் தாண்டி
ஒளிரும் வரை.
ஈண்டு
தன் திங்களின் நரகமும்
நிலவுப்பந்தில் நிலைபெற நிறுவுவான்
தீயற்று
ஏழ்தண் கடலும்
சங்கிலியாய்
தன் கணைக்கால் பிணைக்க.

-- Sylvia Plath, The Everlasting Monday, 1957.

குறிப்பு - ஸில்வியா ப்ளாத், அவர் மகன் நிக்கலஸ் ப்ளாத் இருவரும் தற்கொலை செய்தது திங்களில்தான். முன்னவர் முழுத்திங்களுக்கு மூன்று நாட்கள் பின். பின்னவர் அமாவாசைக்கு மூன்று நாட்கள் முன்.

0 கருத்துகள்:

பதிந்தவை