பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

25.4.09

இறந்தோர் - ஸில்வியா ப்ளாத்

ஒளிஞாயிறதன் வேகத்தில்
நீள்வட்டமாய்ச் சுழலும்

புனித ஆடை போல
களிமண் சவ்வில் ஒளியும்

முழுதாய்க் கவிழ்ந்த புவியின்
கருவறை பெரிதின்
தாலாட்டில் அடங்கும்
இறந்த மனிதர்
காதலில் போரில் கவனம் செலுத்தார்.

ஆன்ம சீஸரும் அல்லரிவர்.
தந்தையரின் பெருமித நாடும்
மீள வேண்டார்.
இறுதிக்கிடக்கைதனில்
இடறிவிழும் இவர்
உலகுச்சேதம் கண்டு
தாம் மறந்துபட விழைவர்.

மிகுசெம்மண் சுற்றி
ஆழத் தாலாட்டுக் காணும்
எலும்புக்கட்டை இவை
எழா,
நிர்மலமாய் எழா,
பேரழிவுபடும் நாளின்
அதிகாலை எக்காளத்தில்.
இவை அமிழும்
பிரம்மாண்ட உறக்கத்தில்.
கடவுளின் கறாரான
அதிர்ச்சிகொண்ட
தேவதை பலவும்
கதறி
எழுப்பவும் முடியாது
இவரை
இவர் விழையும்
இறுதி
இகழ்வான
அழுகலினின்று.

-- Sylvia Plath, The Dead, 1954.

0 கருத்துகள்:

பதிந்தவை