பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

14.4.09

நீரைக் கடத்தல் - ஸில்வியா ப்ளாத்

கரும் ஏரி, கரும் படகு,
வெட்டுண்ட-காகித மனிதர்
கருப்பாய் இருவர்.
இங்கே நீரருந்தும்
கருமரம் பல போவதெங்கே?
இவற்றின் நிழலோ
கனடாவைப் போர்த்தும்
நிச்சயம்.

சிற்றொளியும் எஞ்சும்
நீர்மலர் பலதினின்றும்.
பரபரக்க வேண்டாம் நாம்
என்னும்
இவற்றின் இலைபலதும்
சுழித்தும் தட்டையாயும்
கரு அறிமொழி நிறைந்தும்.

துடுப்பினின்றும் அலங்கும்
குளிர் பல்-உலகம்.
கருமையின் ஆன்மா
நம்மில்
மீன்களில்.
வெளிறும்
விடைபெறும்
தடங்கலும்
கை உயர்த்தும்.

அல்லி மலரிடை
திறக்கும் விண்மீன் பல.
வெளிப்பாடும் அற்று
மயக்குமிப் பேரழகால்
குருடும் ஆகாயோ நீ?
இது
வியந்துபட்ட ஆன்மா பலதின்
மௌனம்.

-- Sylvia Plath, Crossing the Water, 1962.

0 கருத்துகள்:

பதிந்தவை